17th November 2023 10:39:14 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மறைந்த கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ் பீஎஸ்சீ அவர்களின் பூதவுடலுக்கு வியாழன் (16) பிற்பகல் ஏ.எப் ரேமண்ட் மலர்சாலையில் இறுதி மரியாதை செலுத்தினார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மறைந்த அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னர் இராணுவத்திற்காக ஆற்றிய சேவையையும், மே 2009க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் வெற்றிக்கு அவர் எவ்வாறு துணிச்சலுடன் பங்களித்தார் என்பதையும் நினைவு கூர்ந்தார். இராணுவத்தின் சிரேஷ்ட காலாட் படை வீரரின் மரணம் குறித்து அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இரங்கல் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பையும் எழுதினார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சுகயீனம் காரணமாக செவ்வாய்க்கிழமை (14) மாலை காலமானார். அவரது இறுதி கிரியைகள் வியாழக்கிழமை (16) பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.