16th October 2023 22:42:16 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வெளிசெல்லும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் அவர்கள் திங்கட்கிழமை (16 ஆம் திகதி) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பணியை முடித்துக் கொண்டு (இலங்கையில் இவரது பதவிக்காலம் 2020 - 2023 வரை ) இந்தியா திரும்புவதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பொதுவான நலன்கள் மற்றும் இரு இராணுவ அமைப்புகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கெப்டன் விகாஸ் சூட் அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினால் கிடைத்த அனைத்து ஆதரவுகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெளியேறும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் அவர்களுக்கு சேவையின் போது அவரது உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தைப் பாராட்டி, பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னத்தை வழங்கினார்.