16th October 2023 21:56:50 Hours
நிலை உயர்வு பெற்ற இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் மேஜர் ஜெனரல் டி.பி வெலகெதர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி ஆகியோர் புதன்கிழமை (ஒக்டோபர் 4) பனாகொடவில் உள்ள இராணுவ முகாமில் உள்ள 4 வது கள பீரங்கி படையணி மைதானத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
இரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் தனித்தனி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்புடன் நிகழ்வு ஆரம்பமாகியது. குழு படங்கள் மற்றும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.
நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு படையணி படைத்தளபதி, கன்னர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.