Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2023 21:46:29 Hours

வெளியேறும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு பிரியாவிடை

வெளியேறும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு பனாகொட மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் (ஒக்டோபர் 06) பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த வெளியேறும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினருடன் குழுப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தேனீர் விருந்துபசாரத்தின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் உரையாடியதுடன், தனது பதவிக்காலத்தில் அவர்களின் பெறுமதிமிக்க சேவைக்கு நன்றியும் தெரிவித்தார். அத்துடன் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் தளபதிகள் வெளியேறும் மேற்குத் தளபதிக்கு அடையாள நினைவுச் சின்னங்களை வழங்கினர். அன்று மாலை பிரியாவிடை நிகழ்வுகள் விருந்துபசாரத்துடன் முடிவுக்கு வந்தன.

61 மற்றும் 14 காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.