Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2023 11:22:38 Hours

கொள்ளுப்பிட்டி பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவம்

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய பணியாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை பணியாளர்களுடன் இணைந்து இராணுவ குழுவொன்று இன்று காலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்ட பகுதியில் தெனியாய நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது பாரிய மரம் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

142 வது காலாட் பிரிகேட் படையினர் மீட்பு குழுக்களுடன் பாதிக்கப்பட்ட பேருந்தில் இருந்து காயமடைந்தவர்களை வெளியேற்ற உதவியதுடன் டூப்ளிகேஷன் சாலையில் வழக்கமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு சாலையை சீர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அந்த அவசரகால பணியை 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டது.