Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2023 18:43:20 Hours

இராணுவ சேவைகளுக்கு சிறப்பு மன்றாட்டு

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு ஆயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு ஆராதனை செவ்வாய்கிழமை (ஓக்டோபர் 3) பிற்பகல் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ.வீஎஸ்வீ. யூஎஸ்பீ ஆகியோர் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

நிகழ்வு ஆரம்பத்தில் கொழும்பு பேராயர் வண. மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் நிர்வகிக்கப்பட்ட விசேட ஆராதனை மற்றும் நன்றி தெரிவிக்கும் ஆராதனையானது இராணுவக் கொடி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி கொடி மற்றும் அனைத்துப் படையணிக் கொடிகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது. நாட்டுக்காக இராணுவத் தளபதியின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக மதபோதகர்கள் இராணுவத் தளபதியை ஆசீர்வதித்தனர்.

அதே சமயம், இலங்கைத் திருச்சபையின் கொழும்பு முன்னாள் ஆயர் அருட்தந்தை கிறிஷாந்த மெண்டிஸ் அவர்கள், போர்க்களங்களிலும் ஏனைய இடங்களிலும் உயிரிழந்த போர்வீரர்கள் மற்றும் காணாமல் போன போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை வழங்கினர். மேலும் புனர்வாழ்வில் உள்ள அனைத்து இராணுவப் போர்வீரர்களுக்கும் அவர்கள் நிரந்தர காயங்களுக்கு பின் குணமடை ஆசீர்வாதங்களைத் தெரிவித்தார். பேராயர்கள் தங்கள் சுருக்கமான பிரார்த்தனை சொற்பொழிவுகளில் இராணுவத்தின் ஈடு இணையற்ற சேவைகளைத் தொடர அவர்களின் பாராட்டத்தக்க பணிகளுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.

நிகழ்வின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஆன்மீக நல்லிணக்கம் மற்றும் பொது மக்களிடையே சமாதானத்தை மேம்படுத்துவதற்காக தேவாலயத்தால் வழங்கப்பட்ட மத சேவைகளை இராணுவம் பாராட்டுவதன் அடையாளமாக பேராயர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.

இலங்கை பெப்டிஸ்ட் மிஷன் சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை வண.ஹேஷான் டி சில்வா, அருட்தந்தை ஜூட் ஷமன் பெர்னாண்டோ, நுகேகொட மெதடிஸ் தேவாலயத்தின் பொருப்பாளர் வண. சுரங்கிக பெர்னாண்டோ, இலங்கை தேவாலயத்தின் கொழும்பு முன்னாள் ஆயர் வண. கிறிஷாந்த மெண்டிஸ், அனைத்து படைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.