Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2023 18:41:10 Hours

74 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜும்மா பள்ளிவாசலில் 'கிராத்' ஓதுதல்

எதிர்வரும் 74 ஆவது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களின் தொடர்ச்சியாக இராணுவத்தின் இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இன்று (4) காலை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் விசேட துவா பிரார்த்தனையில் இணைந்தது கொண்டனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பிரிகேடியர் டிஎம்எப் கிட்ச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இராணுவ முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் டிஎம்பீ ஜலால் மற்றும் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்களும் இணைந்து வரவேற்றனர்.

இஸ்லாமிய மார்க்க மரபுகளுக்கு இணங்க புனித தலத்தை அலங்கரித்த பின்னர், பிரதம மௌலவி அனைவரையும் பிரார்த்தனை அமர்வுக்கு அழைத்தார். நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பாக மௌலவி ஆற்றிய மும்மொழி வரவேற்புரை நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

வழக்கமான இஸ்லாமிய மார்க்க பிரசங்கமான பயானில் நாட்டின் சிறந்த நலனுக்காக சேவையாற்றும் இராணுவத்தினர் பாராட்டப்பட்டனர். இராணுவக் கொடி மற்றும் இராணுவ அமைப்புகளின் கொடிகளுக்கு 'கிராத்' ஓதி 'துஆ' பிரார்த்தனை மேற் கொள்ளப்பட்டது.

விசேட இஸ்லாமிய மார்க்க வைபவத்தின் இறுதியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புனித வளாகத்தின் அபிவிருத்திக்காக நிதி நன்கொடையை வழங்கினார். மேலும் சகவாழ்வு, நல்லிணக்கம் தொடர்பான தனது கருத்துக்களை மௌலவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறப்பு பிரார்த்தனை அமர்வில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் பொது பக்தர்கள் குழுவும் பங்கேற்றது. மார்க்க வைபவத்தின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக கொள்ளுப்பட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதித் தலைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதே சந்தர்ப்பத்தில், நிர்வாக சபையின் தலைவர் அல்-ஹாஜ் முல்ஸிம் ஸலாஹுதீன் அவர்கள், அன்றைய பிரதம அதிதியான இராணுவத் தளபதிக்கு நிர்வாக சபையின் சார்பாக நினைவுச் சின்னத்தை வழங்கி பாராட்டினார். அதேபோன்று, நிர்வாக சபையின் செயலாளர், இராணுவத் தளபதிக்கு திருக்குர்ஆன் பிரதியை நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார்.

இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவிநிலை பிரதானி சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.