26th September 2023 11:10:21 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 25) புதிய இரண்டு மேஜர் ஜெனரல்களையும் அலுவலகத்திற்கு அழைத்து இராணுவத்தின் அதிகாரச் சின்னங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் தற்போது தேசிய பாதுகாப்புக் கல்லூரி பாடநெறியைப் பின்பற்றும் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமார பீஎஸ்சீ ஆகிய இருவரும் மேலும் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்று மேம்பட்ட தைரியத்துடன் உறுதியளிக்கும் அதிகாரச் சின்னங்களைப் பெற்றுக்கொண்டனர்.
சுமுகமான உரையாடல்கள் மற்றும் வாழ்த்துக்களுக்குப் பின்னர் இராணுவத் தளபதி புதிய இரு நட்சத்திர ஜெனரல்களுக்கு அவர்களின் புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் வாளை வழங்கினார்.
இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள் நிகழ்வை நினைவுகூரும் வகையில் படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் செப்டம்பர் 13 அன்று நிலை உயர்வு பெற்றதுடன், சேவை கடமைகள் காரணமாக நிலை உயர்விற்கான அதிகாரச் சின்னங்களை செப்டம்பர் 13 அன்று பெற்றுக் கொள்ள முடியவில்லை.