16th September 2023 11:58:35 Hours
உலக சாதனைப் புத்தகத்தில் இணைவதற்காக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) அன்று நடைப்பயணத்தினை ஆரம்பித்த மேற்கொண்ட யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி இன்று (16) காலை தனது இலக்கான 580.16 கிமீ துரத்தை தேவேந்திர முனையில் நிறைவு செய்தார்.
கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, அளுத்கம, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களைக் கடந்து 12 நாட்களுக்குள் தனது நடைப்பயணத்தினை நிறைவு செய்த பணிநிலை சார்ஜன் கேஐஎஸ் கீர்த்திரத்ன தேவேந்திர முனையை சென்றடைந்தார்.
மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.பீ.பீ தசநாயக்க, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் நிலைய தளபதி கேணல் ஏகேடி அதிகாரி யுஎஸ்பீ, 3 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் சிப்பாய்கள் பலர் தேவேந்திர முனையில் அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலய சன்னதியில் பணிநிலை சார்ஜன் கேஐஎஸ் கீர்த்திரத்ன அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
செரண்டிப் உலக சாதனைக் குழுவின் பிரதிநிதிகள் செரண்டிப் உலக சாதனைக்கான அனுமதியை உறுதிசெய்த அதே சந்தர்ப்பத்தில் அவரது சான்றிதழை கையளித்தனர்.