04th September 2023 18:55:31 Hours
இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் பீஎஸ்சி திங்கட்கிழமை (செப்டம்பர் 4) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சுமூகமான சந்திப்பில் இரு இராணுவ அமைப்புகளின் அக்கறை மற்றும் ஆர்வமுள்ள பொதுவான விடயங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கேணல் முஹம்மது பாரூக் பீஎஸ்சி அவர்கள் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்டகால பிணைப்புகளை நினைவு கூர்ந்ததுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டினார்.
சுமூகமான சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளமாக புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.