30th August 2023 10:40:00 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் மாத்தளை நாவுல விசேட படையணி தலைமையகத்திற்கு நிர்வாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2023 ஓகஸ்ட் 28 விஜயத்தை மேற்கொண்டார்.
இராணுவத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி அனைத்து படையணிகள் மற்றும் அவற்றின் படையலகுகளில் சுமூகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் வழங்கல், நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக படையணிகள் மற்றும் அவற்றின் படையலகுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் இது முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
இப் படையணிக்கு வருகை தந்த பதவி நிலை பிரதானியை விசேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து வரவேற்கப்பட்டார்.
ஆய்வு நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், பதவி நிலை பிரதானி தனது கருத்துக்களில் இராணுவத்தில் ஒரு தொழில்முறை படைப்பிரிவாக மாறுவதற்கு நிர்வாக ஆய்வுகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இறுதியில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ, எல்எஸ்சீ, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பிஎஸ்சீ, இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஎ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நிர்வாக பரிசோதனை நடவடிக்கையில் பங்குபற்றினர்.