28th August 2023 22:23:49 Hours
இராணுவத்தின் 20வது தளபதியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட படைவீரான, ஜெனரல் ஆர்எம் தயா ரத்நாயக்க (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் (ஓகஸ்ட் 28) லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதியுடனான சுருக்கமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி தனது 35 வருடகாலத்தின் பணியில் வேறுபட்ட மற்றும் பொறுப்பான நியமனங்களையும் இராணுவத்திற்கு அவர் வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, சந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர் செல்வதற்கு முன் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஜெனரல் ஆர்எம் தயா ரத்நாயக்க (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.