11th August 2023 21:23:42 Hours
கண்டி எசல பெரஹெராவில் வெளிச்சத்திற்காக உலர்ந்த தேங்காய்களை (கொப்பரா) வழங்கியதை அடுத்து வெள்ளிக்கிழமை (11) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கண்டி பல்லேகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இராணுவத் தள மருத்துவமனையின் அதன் செயல்பாட்டு அம்சங்களையும் தகவல்களையும் ஆய்வு செய்வதற்காகவும் திடீர் விஜயமென்றினை மேற்கொண்டார்.
கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலம்கும்புர ஆர்டப்ளியு ஆர்எஸ்பீ அவர்கள் வருகை தந்த இராணுவத் தளபதியை அந்த இடத்திற்கு அன்புடன் வரவேற்று புதிய மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிக் காட்டினார். இந்த விஜயத்தின் போது கண்டியில் உள்ள இராணுவத் தள வைத்தியசாலையின் பணிப்பாளருடன் வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அங்கு இராணுவத் தளபதி அதன் செயற்பாட்டு அம்சங்களின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது புதிய மருத்துவமனையை முறையாக பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து இராணுவத் தளபதி வெளி நோயாளர் பிரிவினை உன்னிப்பாகப் பார்வையிட்டதனை தொடர்ந்து பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சிறு ஊழியர்களுடன் உரையாடினார்.
இராணுவ தலைமையக உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ , இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யுஎஸ்பீ மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்துடன் தொடர்புபட்டிருந்தனர்.