Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2023 20:36:10 Hours

மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் அணியினருக்கு 31வது நினைவஞ்சலி

சமகால வரலாற்றின் புகழ்பெற்ற போர் வீரரான மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 31வது நினைவு தினத்தில் (ஓகஸ்ட் 8) அனுராதபுரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி நினைவஞ்சலி வழங்கப்பட்டது. இவர் அனைத்து இலங்கையர்களாலும் மிகவும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் மறைந்த போர் வீரர்களின் ஒருவராகும்.

இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதம அதிதியாக இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.மறைந்த போர்வீரரின் துணைவியார் திருமதி லலி கொப்பேகடுவ மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத்தினர் மற்றும் இலங்கையின் சமாதானத்தை விரும்பும் பொதுமக்கள் பலர் நிகழ்விடத்தில் இணைந்திருந்தனர். சமய அனுஷ்டானங்கள், இரண்டு நிமிட மௌனம், நினைவேந்தல் உரை, மலர் அஞ்சலி, இறுதிக் அறிக்கை மற்றும் ரீவீல் ஆகியன அனுராதபுர நினைவேந்தல் நிகழ்வுகளில் இடம் பெற்றன.

சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரர் 1992 ஓகஸ்ட் 8 அன்று யாழ். அராலி முனை வழியாக பயணித்த போது எல்ரீரீஈ இன் கண்ணிவெடியில் அவரது குழுவினரான மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோர் உயிரை தியாகம் செய்தனர்.

அநுராதபுரத்தில், இராணுவ இசைக்குழுவின் கம்பீரமான தாளங்களுக்கு மத்தியில், அன்றைய பிரதம அதிதி முதல் மலர் மாலை அணிவித்து, மறைந்த இராணுவ வீரரின் பொன் நினைவுக்கு மரியாதை செலுத்தியதோடு, முறையான இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டது. திருமதி லலி கொப்பேகடுவ, மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற போர் வீரர்கள், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மத்தியப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், மறைந்த படைவீரரின் இலங்கை கவச வாகன படையணியின் அதிகாரிகள் அனுராதபுரத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.