19th June 2023 19:25:06 Hours
22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் 221, 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட்களுக்கும், திருகோணமலை மற்றும் புறநகர் பகுதி படையலகுகளுக்கும் 2022 ஜூன் 8 முதல் 13 வரை தனது புதிய பதவியேற்பின் பின்னர் உத்தியோகபூர்வ விஜத்தை மேற்கொண்டார்.
ஒவ்வொரு தலைமையகம், படையணியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதன் வகிபங்கு மற்றும் பணிகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றினார்.
தொடர் விஜயத்தின் இறுதி நாளில், தவுல்வெவ படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்ததுடன், அங்து தற்போது பயிற்சியில் இருக்கும் 6 வது இலங்கை கவச வாகனப் படையணி படையினருடன் கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது, பயிற்சியில் இருக்கும் சிப்பாய்களுக்கு படைப்பிரிவு தளபதி 'வாழ்க்கை' பற்றி ஊக்கமளிக்கும் விரிவுரையையும் நடாத்தினார்.