19th June 2023 19:32:06 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேட் படையினர் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அக்கரைப்பற்று சின்னமுஹாத்துவரம் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முன்னெடுத்தனர்.
கடற்கரையின் அசுத்தமான தன்மை குறித்து 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் 241 வது பிரிகேட்டின் 11 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி படையினர் சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டனர். திட்டமானது 241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 11 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டது.
நிகழ்வின் போது படையினர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் தாள்கள், டின்கள் மற்றும் கேன்கள் போன்ற ஏராளமான மாசுகளை சேகரித்து அவற்றை மீள்சுழற்சி மற்றும் அழிப்பதற்காக கொண்டு சென்றனர்.