18th June 2023 16:15:00 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள 57 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கொக்காவில் போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் 57 வது காலாட் படைப்பிரிவை சென்றடைந்தார். அங்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபிசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
படையலகு பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை நிறைவு செய்த 6 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கியதுடன், அனைத்து சிப்பாய்களுடனும் தேநீரின் விருந்துபசாரத்தின் போது கலந்துரையாடினார்.
அன்றைய நிகழ்ச்சி நிரலில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.