18th June 2023 21:59:57 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதான சமிஞ்சை அதிகாரியும் இலங்கை சமிஞ்சை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ். ரத்நாயக்க என்டியு செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) இரணைமடுவில் உள்ள 9 வது இலங்கை சமிஞ்சை படையணி முகாமுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
9 வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிஎம்எம்பி ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் இராணுவ பாரம்பரியமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி நிரலின் படி, அவர் தனது வருகையைக் குறிக்கும் வகையில் முகாம் வளாகத்தில் ஒரு மாங்கன்று நாட்டினார். அதைத் தொடர்ந்து 9 வது இலங்கை சமிஞ்சை படையணியின் அனைவருடனும் குழு படம் எடுத்துக் கொண்ட பின்னர், படையினருக்கு உரையாற்றினார், அங்கு அவருக்கு நல்லெண்ணம் மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக 9 வது இலங்கை சமிஞ்சை படையணி கட்டளை அதிகாரியினால் சிறப்பு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
பின்னர், அவர் முகாம் வளாகத்திற்குள் கள விஜயம் மேற்கொள்வதற்கு முன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்திலும் கலந்துக் கொண்டார். அதன் பிறகு கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் பிரதம சமிஞ்சை அதிகாரிக்கு நிர்வாகம் மற்றும் தகவல் தொடர்புத் தேவைகள் குறித்த விளக்கினர்.
அன்றைய நிகழ்ச்சியின் நிறைவில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் சில பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.