18th June 2023 16:10:40 Hours
வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் தளபதி பிரிகேடியர் ஏகே ராஜபக்ச ஆர்எஸ்பீ சமீபத்தில் கல்குளம் 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முகாமுக்கு புதன்கிழமை (ஜூன் 14) விஜயம் செய்தார்.
3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் எம்டிஎஸ்யுகே வீரசிங்க யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் வண்ணமயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், படையினருடன் சில குழு படங்களையும் எடுத்துக்கொண்டார். அவர் புறப்படுவதற்கு முன், படையினருக்கு உரையாற்றுகையில் அவர்களின் எதிர்கால முன்னேற்றங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.