17th June 2023 20:53:54 Hours
புதிய கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் திருகோணமலை 22 ஆவது காலாட் படைப்பிரிவுக்கான தனது உத்தியோகபூர்வ கள விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமானை அவர்களை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 16)சந்தித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் செயலக ஊழியர்கள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், பிரதேசம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி , 221 காலாட் பிரிகேட் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.