16th June 2023 19:40:34 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டீயு அவர்கள், அனுராதபுரம் 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணித் தலைமையகத்திற்கு திங்கட்கிழமை (ஜூன் 12) தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் ஆர்டீஆர்எம் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள், மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டீயு அவர்களை அன்புடன் வரவேற்றதுடன், இராணுவ சம்பிரதாயங்களின்படி நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
4 வது இலங்கை சமிக்ஞைப் படையணி வளாகத்திற்கு தனது முதல் வருகையைக் குறிக்கும் வகையில் ‘மாங்கன்றினை’நட்டார்.அதன் பின்னர், மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டீயு அவர்கள் படையிருக்கு ஆற்றிய உரையில், தொழில் வாழ்க்கையின் போது ஒழுக்கத்தின் உயர் தரத்தைப் பேணும் அதேவேளை, நிபுணத்துவத்தின் பெறுமதியை வலியுறுத்தினார். அவரது உரையின் முடிவில், வருகை தந்த பிரதம சமிக்ஞை அதிகாரிக்கு கட்டளை அதிகாரி நினைவுப் பரிசு வழங்கினார்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் நிலை மற்றும் பிரிவு தொடர்பான நிர்வாக விடயங்கள் தொடர்பில் கட்டளை அதிகாரி விரிவான விளக்கமளித்தார்.
விஜயத்தின் முடிவில் படைத் தளபதி தனது மதிப்புமிக்க எண்ணங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், அதிதி பதிவேட்டில் பாராட்டு குறிப்புகளையும் பதிவிட்டார்.