15th June 2023 23:51:29 Hours
பிரிகேடியர் ஜிஏ முனசிங்க ஆர்எஸ்பீ அவர்கள், தொம்பகொட இராணுவ போர் கருவிப் படையணி தலைமையகத்தில் நடை பெற்ற விழாவின் போது இராணுவ போர் கருவிப் படையணியின் புதிய படைத் தளபதியாக புதன்கிழமை (7) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ போர் கருவிப் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி கேணல் கேஎம்ஏடபிள்யுகே பெரேரா ஏஏடிஓ அவர்கள், பிரதான நுழைவாயிலில் புதிய படைத் தளபதியை வரவேற்றதுடன், இராணுவ போர் கருவிப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இராணுவ போர் கருவிப் படையணி தலைமையகத்தில் வீழ்ந்த போர் வீரர்கள் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்,
அந்நாளின் நினைவாக மரக்கன்றினையும் நட்டு, குழுப்படத்தினையும் எடுத்துக் கொண்டார்.
புதிய நியமனத்தில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கும் வகையில், படையணி அதிகாரிகள் முன்னிலையில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்து நிலையினருடானான தேநீர் உபசாரத்தில் கலந்து கொண்டதுடன், படையினருக்காற்றி உரையின் போது அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும், குழுவாகச் செயல்படுவதன் மூலம் நிறுவன இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.