13th February 2023 21:20:25 Hours
பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் 13 வருடங்களுக்கு முன்னர் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய பல்லேகலை 6 வது களப் பொறியியல் படையணிக்கு புதன்கிழமை (08) முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். வருகை தந்த தளபதியை 6 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சிஆர் லஹதாசிங்க அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, முகாம் வளாகத்தில் மாங்கன்றினையும் தளபதி நட்டார்.அன்றைய நிகழ்ச்சி நிரலின் மேலும் ஒரு பகுதியாக புதிய அலுவலக கட்டிடத்தை பதாதை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைத்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள், உற்கட்டமைப்பு மேம்பாடு, முகாம் பாதுகாப்பு, பயிற்சி தொகுதிகள், வீரர்களின் நலன் மற்றும் போர் தயார்நிலை ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து வருகை தந்த தளபதிக்கு ஒரு முறையான விளக்கக்காட்சியுடன் கட்டளை அதிகாரி விளக்கினார். அதன்பின்னர், மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் அனைத்து படையினர்களிடம் உரையாற்றியதுடன், படையணியின் கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்ததுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். முகாமிற்குள் களப்பயணத்துடன் முறையான வருகை நிறைவுற்றது.கேணல் பொதுப்பணி கேணல் பிரதீப் சிறிவர்தன, மற்றும் கள பொறியியல் பிரிகேடின் கேணல் திட்டம் லெப்டினன் கேணல் சாலிய ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.