02nd March 2023 16:45:32 Hours
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால்புஸ்ஸல்ல செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 28) பனாகொட இராணுவ வளாகத்திலுள்ள 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு விஜயம் செய்தார்.
தளபதி அவர்களை 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் டி எம் சி எம் வீரகோன் அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மற்றும் பணிநிலை அதிகாரிகளிடமிருந்து அதன் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தை அவர் பெறுவதற்கு முன் பிரதான நுழைவாயிலில் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி படையலகு அதிகாரிகளுடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் மேலும் படையினரின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை தயார்நிலையுடன் நிறைவேற்றுவதையும் கோடிட்டுக் காட்டினார். இக்கலந்துரையாடலின் போது படையணி நிர்வாகம் தொடர்பான ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் முகாம் வளாகத்தை ஆய்வு செய்ததுடன் முகாமை விட்டு வெளியேறும் முன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் உரையாடினார். மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அசேல அமரசேகர, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்துடன் இணைந்திருந்தனர்.