09th June 2023 18:59:29 Hours
பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் பிரியாவிடை ஜூன் 07 அன்று மத்தேகொட பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய மரபுகளின்படி நடாத்தப்பட்டது.
பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்திற்கு வந்த போது நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன்,அணிநடை மரியாதை, குழுப்படம் எடுத்தல் என்பனவும் இடம் பெற்றது.
பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றுகையில் அவரது பதவிக்காலத்தில் அனைத்து தரப்புகளும் அவருக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.
குறிப்பாக இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் செயல்பாட்டுத் தயார்நிலைக்கான தொடர்ச்சியான இராணுவப் பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார், மேலும் அமைப்பின் முன்னேற்றத்திற்காக அதே உணர்வில் தங்கள் அர்ப்பணிப்பைத் தொடருமாறு வலியுறுத்தினார்.
அனைத்து நிலையினரின் தேநீர் விருந்துடன் பிரியாவிடை நிகழ்வை நிறைவுக்கு வந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.