09th June 2023 19:05:14 Hours
கஜபா படையணியின் பிரிகேடியர் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் புத்தள இராணுவப் போர் கல்லூரியின் புதிய தளபதியாக 2023 ஜூன் 5 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதி வருகை தந்ததுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதி தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அவரது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதை குறிக்கும் வகையில், சுப நேரத்தில் சம்பிரதாய முறைகளுக்கமைய உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர், கல்லூரி வளாகத்திற்குள் மரக்கன்று நட்டுவைத்ததுடன், போர் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் குழு படத்தில் இணைந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பிரதான கேட்போர் கூடத்தில் முறையே பாதுகாப்புக் கற்கைக் கிளை அதிகாரிகள், நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் படையினருக்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வு அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் முடிவடைந்தது.