Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2023 20:10:14 Hours

5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் சக்கர நாற்காலிகள் திருத்தம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் வைத்தியசாலையில் பாவனையில் இல்லாத 35 சக்கர நாற்காலிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) திருத்தியமைத்து தேவையான பழுதுபார்ப்புகளின் பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டன.

வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வைத்தியசாலையில் முறையான சக்கர நாற்காலிகள் இல்லாததை கருத்திற் கொண்டு இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொண்டார்.

பயன்படுத்த முடியாத அந்த சக்கர நாற்காலிகளை சில நாட்களில் 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் சரி செய்யப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி 3 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.