03rd February 2023 21:46:16 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது இலங்கை சிங்கப் படையினர் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நோக்குடன் மண்ணாங்கண்டல் ஆரம்பப் பாடசாலையின் சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சியை திங்கட்கிழமை (ஜனவரி 30) முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர, 64 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம, 641 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல கொலொன்ன, ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆர்எம்என்எல் ராஜநாயக்க அவர்களால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை நேரத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஓர் அதிகாரி மற்றும் 10 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.