30th May 2023 21:36:37 Hours
வத்தளை ஹெக்கித்தை ரணவிரு வள மையம் அதன் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (மே 24) சில வேலைத்திட்டங்களை ரணவிரு வள மையத்தின் தளபதி பிரிகேடியர் டிஎச்டிஎஸ்ஆர் சிறிமான்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்தது.
ஆண்டு விழாவை முன்னிட்டு, திங்கட்கிழமை (மே 22) வளாகத்தில் ‘பிரித்’ பாராயணம் இடம்பெற்றதுடன் ரணவிரு வள மையத்தின் தளபதி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பங்கேற்றார்.
ஆண்டு நிறைவு நாளில், ரணவிரு வள மையத்தின் தளபதி வளாகத்தில் மரக்கன்றினை நடுவதற்கு அழைக்கப்படுவதற்கு முன்னர், 14 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
படையினருக்கு அவர் சம்பிரதாயமாக உரையாற்றியதுடன் அன்றைய தினம் விசேட அம்சமாக படையினருடன் மதிய உணவிலும் இணைந்து கொண்டார்.