30th May 2023 21:40:31 Hours
இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை மே 26 பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு படையினரின் நலன் மற்றும் படையணியின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்என் சமரநாயக்க அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து இராணுவ பதவி நிலைப் பிரதானி தலைமையக வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்ததை தொடர்ந்து அவர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக படையினருக்கு உரையாற்றினார்.
அவர் புறப்படுவதற்கு முன்பு, அவர் அதிதி பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார். இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி கேணல் எம்பிஎஸ்பி குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.