Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2023 20:31:22 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ‘விரு சிசு பிரதீபா’ கட்டம்-2 ல் 100 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விரு சிசு பிரதீபா’ புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் மறைந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் வியாழக்கிழமை (பெப்ரவரி 23) தலா ரூ. 25,000 பெறுமதியான மேலும் 100 புலமைப்பரிசில்களை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த போர்வீரர்களின் மகன்மார் மற்றும் மகள்மார் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகப் போராடிய காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள படையினர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு நிதியம் மற்றும் இலங்கை வங்கி இணைந்து இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அனுசரணை வழங்கின.

இத்திட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்த கல்வித் தேவைகளுக்கு தமது சேமிப்புக் கணக்கில் ரூபா 25,000 வைப்பிலிடப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட இரு பிள்ளைகள் வெற்றிலை வழங்கி பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரை வரவேற்றனர்.

மங்கள விளக்கற்றல் , இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் பாடப்பட்டதனை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. இதில் 30 பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுகள் தொடரும் முன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அந்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதியை வழங்கியதன் பின்னர் உரையாற்றியதுடன் இளையவர்கள் கடினமாகப் படித்து இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமக்களாக இருக்க வேண்டும் ஏனெனில் இது அவர்களின் இறந்த தந்தைகள் அல்லது காயமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அமையும் என கூறினார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தலா ரூ. 7000.00 பெறுமதியான ஆங்கில-சிங்கள அகராதி உட்பட பல பாடசாலை உபகரணங்களை இராணுவத் தளபதி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜீ.எஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் வழங்கினர்.

அதன்பின் இங்கிலாந்தின் சசெக்ஸ், லயன்ஸ் கிளப் ஒப் ஹார்ஷம் ஆதரவுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நன்கொடையாளர்கள் திரு டான் ஆண்டனி மற்றும் திருமதி சாமினி ஆண்டனி ஆகியோர் சுமார் ரூ. 2.7 மில்லியன் பெறுமதியான மூக்குக்கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகள் மாத்தளை கைகாவல, கொஸ்வான சிறப்புப் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் தேவையுடைய இராணுவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.

அவர்களின் தாராள மனப்பான்மையை அங்கீகரிக்கும் வகையில், இராணுவத் தளபதி திரு,திருமதி அந்தோணி இருவருக்கும் ஒரு அடையாள நினைவுப் பரிசை வழங்கினார்.