03rd February 2023 21:51:12 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழுள்ள 234 வது காலாட் பிரிகேடின் 7 வது இலங்கை பீரங்கிப் படையினர் பெப்ரவரி 02 அன்று உயர்தரப் பரீட்சையின் பரீட்சார்த்திகளுக்கு பொலன்னறுவை றோயல் கல்லூரியில் மாற்று இரண்டு புதிய பரீட்சை மண்டபங்களை ஏற்பாடு செய்வதற்கு தமது உதவிகளை வழங்கினர்.
அடை மழை காரணமாக பொலன்னறுவை றோயல் கல்லூரியில் உள்ள உயர்தரப் பரீட்சை மண்டபங்கள் வியாழக்கிழமை (2) நீரினால் பாதிக்கப்பட்டிருந்தது.
7 வது இலங்கை பீரங்கிப் படையினர், தமன்கடுவ பிரதேச செயலகப் பிரிவின் பரீட்சை ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, திட்டமிட்டபடி பரீட்சையை தடையின்றி நடாத்துவதற்காக பரீட்சை மண்டபத்தை மறுசீரமைத்தனர்.
23 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 234 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் பேரில், 7 வது இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், படையினர் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு இன்றித் பரீட்சையை தொடர மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர்.