25th January 2023 21:48:26 Hours
கடவத்தை யோர்க் தேசிய பாடசாலையினால் ஞாயிற்றுக்கிழமை (22) பாடசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரத்த தானம் வழங்கும் திட்டத்தில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் இணைந்து கொண்டனர்.
பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரண்டு அதிகாரிகள் மற்றும் 28 சிப்பாய்கள் 6 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஎச்எம்டி குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 141 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லாவினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பேரில் இந் சமூக நலத்திட்டங்கள் நடைப்பெற்றது.