24th January 2023 19:26:05 Hours
புதிதாக பதவியேற்ற பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்கள் கிரலகொல்லவில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலகு ஆயுத கலாட் படையணிக்கு வெள்ளிக்கிழமை (21) கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
4 வது இலோசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யுடிடிஆர் வீரபுர அவர்கள் முகாம் நுழைவாயிலில் மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்களை கௌரவத்துடன் வரவேற்றதுடன், 4 வது இலோசாயுத காலாட் படையணி படையினரால் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து 4 வது இலோசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் பணிகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன். அதனைத் தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றியதுடன், படையணியில் ஒழுக்கம் மற்றும் நிலையான பயிற்சிகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
படைத் தளபதியின் வருகைக்கு அடையாள முக்கியத்துவத்தைச் சேர்கும் வகையில் கட்டளை அதிகாரியினால் அன்றைய பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அவர் செல்வதற்கு முன், 4 வது இலங்கை இலகு ஆயுத கலாட் படையணியின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய பல வருடங்களுக்கு முன் 4 வது இலோசாயுத காலாட் படையணியின் 12 வது கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந் நிகழ்வில் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.