23rd January 2023 16:30:39 Hours
இலங்கை நீர் விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது தேசிய திறந்தவெளி நீச்சல் போட்டி (5 கி.மீ.) பலப்பிட்டிய கரையோரப் பகுதியில் ஜனவரி 22 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 13 விளையாட்டுக் கழகங்களின் 70 நீச்சல் வீரர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
2010 ஆம் ஆண்டு முதல் இராணுவ நீச்சல் வீரர்கள் பலப்பிட்டியவில் நடைபெற்ற பிரபலமான கடற்கரை நிகழ்வில் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் உடைக்கப்படாத மேலாதிக்கத்தைப் பேணி வருகின்றனர். சம்பியன்ஷிப் வெற்றிக்கிண்ணத்தினை 2023 ஆம் ஆண்டுக்கான இராணுவ அணியின் தலைவர் சிப்பாய் டபிள்யூ.எம்.பி.எல் அபேரத்ன கைத்தட்டல்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டார்.
இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் போட்டியாளர்களுக்கு தேவையான நிர்வாக வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியதன் மூலம் அவர்களின் இலக்கை அடைய அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வின் சிறந்த நீச்சல் வீரராக 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் பி டி ஷெஹான் விருது பெற்றார்.