Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2023 23:56:07 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரிகேடியருக்கு கெமுனு ஹேவா படையணினரால் பிரியவிடை

குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி10) ஓய்வுபெறும் பிரிகேடியர் ஜனக் ஜயவர்தன அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு கெமுணு ஹேவா படையணியின் படைத்தளபதியும் இராணுவ காலாட் படை பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நாளின் பிரதம அதிதியை கெமுணு ஹேவா படையணி பிரதி நிலைய தளபதி கேணல் சுராஜ் கமகே அன்புடன் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை கெமுணு ஹேவா படையினரால் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன்.

அதைத் தொடர்ந்து வளாகத்தில் உள்ள நினைவு தூபிக்கு தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாலையில் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு இரவு விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. கெமுணு ஹேவா படையணி படைத்தளபதி அவர்கள் பிரிகேடியர் ஜனக் ஜயவர்தனவின் சேவைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துடன் சிரேஷ்ட அதிகாரியின் சில முக்கிய சாதனைகள், தடங்கள் மற்றும் நினைவுகளை நினைவு கூர்ந்து பிரியாவிடை உரையினை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். பிரிகேடியர் ஜனக் ஜயவர்தன ஓய்வுபெறுவதற்கு முன்னர் 641 வது காலாட் பிரிகேடின் தளபதியாக கடமையாற்றினார்.