Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2023 23:53:54 Hours

முதலாம் படையணி படையினருக்கு நடவடிக்கை சட்டம் பற்றிய கற்கை

முதலாம் படையணி தலைமையகத்தின் சட்ட அதிகாரி கேப்டன் எஸ் எ டீ எச் டயஸ் அவர்களினால் நடத்தப்பட்ட “நடவடிக்கை சட்டங்கள்” என்ற தலைப்பில் மதிப்புமிக்க 2 நாள் செயலமர்வு ஜனவரி 11 – 12 திகதிகளில் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. முதலாம் படையணி தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் வழிகாட்டலில் இந் நிகழ்வு நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் இலங்கையின் சட்ட அமைப்பு, நீதி நடைமுறைகள், சட்டத்தின் வகைகள், நீதிமன்றப் படிநிலை, சட்டக் கட்டமைப்பின் கீழ் முப்படைகளுக்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, பொது பாதுகாப்பு கட்டளை, அவசரகால சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டம் மற்றும் உள் பாதுகாப்பு ஈடுபடுவதற்கான விதிகள் பற்றி பயின்றனர்.

இந் நிகழ்வில் முதலாம் படையணியின் கீழ் உள்ள அமைப்புக்களின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சூம் தொழில்நுட்பம் மூலம் பங்குபற்றினர். முதலாம் படையணியின் மொத்தம் 98 அதிகாரிகளும் 2212 சிப்பாய்களும் இச் செயலமர்வில் பயன்பெற்றனர்.