19th January 2023 21:20:33 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியானது 22 மற்றும் 23 வது காலாட் படைபிரிவுகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் 24 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இப் போட்டிகளின் முதற் சுற்றுகள், கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் உட்பட படைப்பிரிவுகளின் ஐந்து அணிகள் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் 24 வது காலாட் படைபிரிவின் அணியை எதிர்த்து போட்டியிட்ட 23 வது காலாட் படைப்பிரிவின் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
24 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல சந்திரசிறி அவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்புடன் 24 வது காலாட் படைப்பிரிவு படையினரால் இப் போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டன.
22, 23 மற்றும் 24 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பார்வையாளர்கள் மத்தியில் இப் போட்டிகள் இடம்பெற்றன.