06th January 2023 20:59:05 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அனுசரணையின் மூலம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் 2000.00 ரூபா பெருமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வியாழக்கிழமை (5) ஹோமாகம பிடிபன ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் வைத்து வழங்கியது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள், 142 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரவீந்திர ஜயசிங்க மற்றும் 15 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் டபிள்யூஏஎஸ்எம் விஜயலத் ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையில் படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர் மற்றும் பயிற்சி பணியாளர்களின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.