Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd January 2023 15:27:13 Hours

2023 புத்தாண்டு இராணுவத் தலைமையகத்தில் சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டது

சம்பிரதாயங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த இன்பப் பரிமாற்றங்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தின் 'தேசத்தின் பாதுகாவலர்கள்' 2023 புத்தாண்டின் முதல் கடமையை கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், ஆகியவற்றுடன் வரவேற்றனர். மேலும் தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம், தளபதியின் புத்தாண்டு உரை மற்றும் கலந்துரையாடல்கள் என்பன திங்கட்கிழமை (2) காலை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றன.

பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் தேசியக் கொடியும் இராணுவக் கொடியும் ஏற்றப்பட்டது. அணிவகுப்பில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.

தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் பாடியதனை தொடர்ந்து வீரமரணம் அடைந்த அனைத்துப் போர்வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யுடபிள்யுடபிள்யுஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் அரச சத்திய பிரமாணம் வாசிக்கப்பட்டது.

பின்னர், அமைப்பின் தலைவர் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் உரையாற்றப்பட்டது. அவர் ஆற்றிய உரையில் கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை நிறைவேற்றுவது மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதிப்பாடுகளை சுருக்கமாகக் கூறியதுடன், நாட்டின் நலன்களுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதிய பொறுப்புகளுடன் எதிர்காலத்தின் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பதையும் விளக்கினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் “2023 புத்தாண்டு பிறப்பில், இலங்கை இராணுவத்தின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு வளமான புத்தாண்டுக்கான எனது அன்பான வாழ்த்துக்களை நான் முழு மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை இராணுவத்தின் துணிச்சலானவர்களால் செய்த தன்னலமற்ற தியாகங்கள் அளவிட முடியாதவை, மறுக்க முடியாதவை மற்றும் அவர்களின் வரலாறு வருடா வருடம் அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமையின் போது மிக உயர்ந்த தியாகத்தை செய்த இராணுவத்தின் அனைத்து வீரம் மிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறேன். எமது தாய்நாட்டைப் பாதுகாக்கும் கடமைகளைச் செய்வதில் காயமடைந்து அங்கவினமுற்ற அனைவரையும் நான் மரியாதையுடன் நினைவு கூர்ந்து அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியுமான அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தற்போதைய இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட தொலைநோக்கு தலைமைத்துவத்திற்காக கௌரவமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டில் உள்ள சவால்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் திறமையான வழிகாட்டலுக்கும், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஜி டி எச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி யுஎஸ்பீ என்டிசி பிஎஸ்சி எம்பிஎச்ஐஎல் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டிசி பிஎஸ்சி எம்பிஎச்ஐஎல் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது உண்மையான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை இராணுவம், தேசத்தின் பாதுகாவலர் என்ற வகையில், அதன் சேவைகளை பன்முகப்படுத்தப்பட்ட துறைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கை முன்னெடுத்து வருகிறது. இயற்கைப் அனர்தங்கள், கொவிட்-19 தொற்று நோய், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் போது இராணுவ வீரர்கள் ஆற்றிய தன்னலமற்ற உதவிகள் மிகவும் பெருமையுடன் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விடயம். தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இதுபோன்ற சவால்கள் ஏற்படும் போதெல்லாம் விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்படுவது இராணுவ வீரர்களாகிய நமது முக்கிய பொறுப்பு. இந்த முடிவைச் சந்திக்க, அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகள் தயார்நிலையைப் பேணுவதற்கும், சாத்தியமான சவால்களை தொடர்ந்து திட்டமிடுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும் மற்றும் சாத்தியமான சவால்களை எதிர்கொள்ள கட்டளையின் கீழ் உள்ள படையினருக்கு பயிற்சி அளிக்கவும் வேண்டும்.

மிக முக்கியமாக, நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால ஆர்பாட்டங்களின் போது பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் உங்கள் விதிவிலக்கான ஒழுக்கம், செயல்திறன் மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்காக நான் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன். எந்தவொரு இராணுவத்தின் மேலாதிக்கம் அதன் உறுப்பினர்களின் ஒழுக்கமாகும், எனவே வரும் ஆண்டிலும் நீங்கள் வெளிப்படுத்தும் ஒழுக்கத்தையும் முன்மாதிரியான நடத்தையையும் பேணுவதை நான் வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் சவால்கள் மற்றும் கஷ்டங்கள் உங்களுக்கே விதிவிலக்கல்ல, இருப்பினும் உங்களால் நம்பி கொடுக்கப்பட்ட கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு விசுவாசம், தொழில்முறை மற்றும் நற்பண்புக்கு சான்றாகும்.

வெற்றிபெற்ற இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர்களாகிய நாம், நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக செயற்பாடுகளை பாதுகாப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்பை பெற்றுள்ளோம். இந்த முதன்மைப் பாத்திரங்களுக்கு மேலதிகமாக, பல இரண்டாம் நிலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் தேசத்தின் நலனுக்காக முந்தைய ஆண்டை விட மிகவும் திறம்பட மற்றும் திறமையாக அந்தப் பணிகளைச் செய்ய நாம் ஆர்வத்துடன் இருத்தல் வேண்டும்.

அந்த முயற்சிகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அம்சங்களில் நல்லிணக்கம் மற்றும் விரும்பிய வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் நாம் முன்னோடியாக இருக்க வேண்டும். தவிர, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் விவசாயத் துறையை மீட்டெடுப்பதில் இராணுவத்தின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த பங்களிப்பு எதிர்காலத்தில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான முறையில் நீட்டிக்கப்பட வேண்டும். மேலும், தன்னலமின்றி கடமையில் ஈடுபடுவதிலும், தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும், நாடு முன்னேற நிதி ஸ்திரத்தன்மை தேவைப்படும் நிலையில் இருந்து மீண்டு வருவதிலும் நாம் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு இணங்க இராணுவத்தின் நிறுவன கட்டமைப்பு, செயல்பாட்டு வரிசைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுக் கருத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்பதையும், அதற்காக 2023 ஆம் ஆண்டில் வழிநடத்துவது எனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன கருத்துகளின் அடிப்படையில் இராணுவ திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் நோக்கங்களை அடைவதற்கான எங்கள் முழு முயற்சிகளில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன். ஒரு நாடாக நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த கொந்தளிப்பான காலப்பகுதியிலும், இராணுவத்தின் பெருமையையும் திறமையையும் நிலைநிறுத்துவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் நிர்வகித்து முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் கட்டளைகளின் கீழ் உள்ளவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது உங்கள் கடமை என்பதை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நினைவுபடுத்துகின்றேன். இந்த சவாலான காலகட்டம் கீழ்மட்ட ஊழியர்களையும், சிவில் ஊழியர்களையும் கடுமையாக பாதித்துள்ளதுடன், அவர்களின் பிரச்சினைகளை நடைமுறையில் தீர்க்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உங்கள் வரம்புக்கு அப்பாற்பட்ட விடயங்கள் எந்த தாமதமும் இன்றி முறையான ஒழுங்கில் எனக்கு அனுப்பப்படும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எமது விளையாட்டு வீர வீரங்கணைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்ட வெற்றிகளைப் பெற்று இலங்கை இராணுவத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளனர், மேலும் எதிர்வரும் வருடம் எமது விளையாட்டுத் துறையில் எமது பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை. சேவையில் உள்ள உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தொழில்சார் மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் குறித்து நான் மனநிறைவை உணர்கிறேன். பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டிலும் அந்த நலத்திட்டங்களைத் தொடர விரும்புகிறேன்.

தேசத்திற்கு கெளரவமான சேவையை ஆற்றி பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கு நீங்கள் அனைவரும் கைகோர்ப்பீர்கள் என்பது எனது ஆழ்ந்த எதிர்பார்ப்பாகும். இந்த உன்னத நோக்கத்திற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு. புத்தாண்டிலும் இராணுவத்தின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணுவதில் நீங்கள் ஒப்படைக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இராணுவத்தினருக்காக மகத்தான சேவையை ஆற்றிவரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறுதியாக, தற்போது சுறுசுறுப்பான சேவையில் ஈடுபட்டு இந்த நாட்டைப் பாதுகாக்கும் உங்கள் அனைவருக்கும், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், 2023 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைய தைரியம், வலிமை மற்றும் அதிர்ஷ்டம் கிட்ட பிராத்திக்கின்றேன்.

நம் அன்புக்குரிய தாய்நாட்டைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் எம்மை அர்ப்பணிப்போம்.

உங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்!''

அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து புத்தாண்டு விசேட பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.