Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2022 19:08:56 Hours

பொது பொறியியலாளர் பிரிகேடினர் விதவை பெண்ணுக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

எம்பிலிப்பிட்டியவில் அமைந்துள்ள பொதுப் பொறியியல் பிரிகேடின் படையினர் மூன்று பிள்ளைகளுடன் விதவை பெண் வீடற்று படும் துன்ப நிலையினை உணர்ந்து, மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால (ஓய்வு) அவர்களின் நிதி ஒருங்கிணைப்பு ஊடாக புதிய வீட்டைக் நிர்மாணித்தனர்.

மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால (ஓய்வு) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிநாட்டில் வசிக்கும் திரு.லலித் ஜயசுந்தர இந்த திட்டத்திற்கு நிதியளிக்க முன்வந்தார்.

நன்கொடையாளரின் ஒருங்கிணைப்புடன் இரண்டு வாரங்களுக்குள் இந்த வீடு படையினரால் கரவிலயாய துங்கமவில் நிர்மாணிக்கப்பட்டது. திங்கட்கிழமை (14) இடம்பெற்ற புதிய வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால (ஓய்வு) மற்றும் நன்கொடையாளர் திரு.லலித் ஜயசுந்தர இணைந்து புதிய வீட்டினை உரிமையாளரான திருமதி கே.டி. நிலுகா தயானி மற்றும் மூன்று பிள்ளைகளிடமும் கையளித்தனர்.

பொதுப் பொறியியல் பிரிகேடின் 12 வது (தொ) இலங்கை பொறியியல் சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் கே.டபிள்யூ.யு.எம் குணதிலக்க அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 12 வது (தொ) இலங்கை பொறியியல் சேவை படையணி படையினரால் அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் மனித வலுவினையும் பயன்படுத்தி வீட்டினை நிர்மாணித்தனர். பொதுப் பொறியியல் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ் அவர்கள் திட்டத்தின் வெற்றிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

பொதுப் பொறியியல் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ், 12 வது (தொ) இலங்கை பொறியியல் சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் கே.டபிள்யூ.யு.எம் குணதிலக்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.