11th October 2022 18:02:55 Hours
பனாகொட இராணுவ தலைமையக முகாமில் இராணுவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (10) மாலை அனைத்து படையணிகளை சேர்ந்த படையினர் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பங்குபற்றுதலில் இரவு உணவு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரவு உணவு விருந்துபசாரம் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றதுடன் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த இரவு விருந்தின் மூலம் படையினர் ஒருவரையொருவர் சந்தித்து பல்வேறு பயனுள்ள கருத்துக்களை பரிமாறிக் கொள்வர். இதன் மூலம் இராணுவத்தின் வாழ்வியல் காரணிகள் மற்றும் நட்புறவினையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பன குறிப்பிடதக்கதாகும்.
இந்த இரவு விருந்தில் இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி படையினர் கலந்துகொண்டனர். இந்த இரவு உணவு விருந்துபசாரத்திற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள் , படையணித் தளபதிகள் கலந்துகொண்டனர்.