16th August 2022 17:16:27 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் சேவையாற்றும் சிரேஷ்ட பிரிகேடியர்களில் ஒருவராகவிருந்து மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் துசித சில்வா தனது புதிய பதவிச் சின்னத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் இருந்து இன்று (16) பிற்பகல் இராணுவத் தலைமையகத்திலுள்ள இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியை சேரந்த இவர் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியாக சேவையாற்றிவருகிறார்.
இதன் போது லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் அவரது எதிர்கால வாய்ப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த அதேவேளை, தேசிய பாதுகாப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகம் சார்ந்த அபிவிருத்திப் பணிகளுக்கான அர்ப்பணிப்புப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவருக்கு நினைவுபடுத்தினார்.