Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2022 22:21:54 Hours

இராணுவத் தளபதி 53 மற்றும் 58 வது படைப் பிரிவினருக்கு உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இன்று (6) பிற்பகல் முதலாவது படையணி தலைமையகத்தின் கீழுள்ள 53 மற்றும் 58 வது படைப்பிரிவு படையினரை இராணுவத் தலைமையகத்திற்கு அழைத்து அவர்களிடம் உரையாற்றினார்.

இந்த உரையின் போது, நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர் கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை இராணுவத் தளபதி விளக்கினார்.

இந்த உரையின் போது முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.