06th March 2022 13:57:00 Hours
சந்த ஹிரு சேய சலபடலமலுவ'வைச் சுற்றி 28 புத்தர் சிலைகள் வைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் முதல் பெண்மணி மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுடன் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவாக அனுராதபுரத்தில் உள்ள தகோப புனித தூபிக்கு சனிக்கிழமை (5) காலை விஜயம் செய்து வணக்கம் செலுத்தினார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் விமானப்படைத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.அந்த புத்தர் சிலைகள் நேற்று (4) மெல்சிறிபுரவில் இருந்து வண்ணமயமான ஊர்வலம் மூலம் எடுத்து வரப்பட்டன.
அதேவேளை வளாகத்தில் உள்ள புதிய விகாரைக்கு காணிக்கை செலுத்துவதற்கு ஜனாதிபதி நேரம் ஒதுக்கினார்.பல பாராளுமன்ற உறுப்பினர்கள், சில அரச அதிகாரிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.