22nd December 2021 21:32:51 Hours
12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள், குடாஓயா பொதுப் பகுதியில் உள்ள 40 பேர்ச் காணியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா செய்கையினை திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டு அப்பகுதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் பணிப்புரையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்கவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பிலான குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்