19th December 2021 14:15:32 Hours
இராணுவத் தலைமையகத்தில் உள்ள படையினர் விவகார பணிப்பகம், இலங்கை இராணுவ சிங்கப்படை தலைமையகம் மற்றும் 15 வது இலங்கை சிங்கப்படையணியினர் இணைந்து வழங்கிய 1.5 மில்லியன் ரூபாய் நிதி உதவியை கொண்டு, மதவாச்சி – பூனேவ மஹகும்புக்கொல்லேவவில் வசிக்கும் ஊனமுற்ற போர்வீரர் ஒருவருக்கான புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்தின் வீடமைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி புதிய வீடு 11 வது படைப்பிரிவு தளபதியும் தளபதி சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களினால் 2021 டிசம்பர் 10 நடைபெற்ற நிகழ்வின் போது 8 வது இலங்கை இராணுவ சிங்கப் படையணியை சேர்ந்த பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் வீட்டின் பெயர் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதோடு, பால் பொங்கும் நிகழ்வின் பின்னர் பயளாளியிடம் வீட்டின் சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் விராஜ் விமலசேன, 15 வது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்ஜேஏபி ராஜபக்ஷ, சிப்பாய்கள், பயனாளி குடும்பத்தின் அங்கத்தவர்கள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.