Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2021 16:00:43 Hours

11 வது படைப்பிரிவின் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடையுடன் மரியாதை

குண்டசாலை 11 வது படைப்பிரிவு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் படைப்பிரிவிலிருந்து வெளியேறவிருக்கும் தளபதிக்கு செவ்வாய்க்கிழமை (14) பிரியாவிடை நிகழ்வில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது படைப்பிரிவிற்கு வருகை தந்த தளபதிக்கு நுழைவு வளாகத்தில் 10 வது கஜபா படையணி சிப்பாய்களால் பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து 8 மாதங்களுக்கும் மேலாக அவரின் கீழ் பணியாற்றிய உறுப்பினர்களுக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார்.

தனது பதவிக் காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கு சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்கும் அதேவேளை புதிதாய நியமனம் பெறவுள்ள தளபதிக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனையடுத்து இடம்பெற்ற குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவை எட்டியது.

மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் இலங்கை சிங்கப்படையணியின் தளபதியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் 11 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தலைமையகத்தின் கீழுள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததோடு வெளிச்செல்லும் தளபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.