16th December 2021 22:11:41 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக சிப்பாய்களால் வெளிச்செல்லும் தளபதியான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களுக்கு பனாகொடையில் மரியாதை அணிவகுப்பொன்று புதன்கிழமை (15) நடத்தப்பட்டது.
பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தளபதியவர்கள் வருகை தந்த போது, தலைமையக சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் வெளிச் செல்லும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் படையினருக்கு ஆற்றிய உரையில் தனது பதவிக் காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டதோடு, சிப்பாய்களுடனான விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
61 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஹேவகே அவர்களினால் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ளவர்களின் சார்பாக சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக விரைவில் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் சில சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்களாக பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.