Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2021 13:00:44 Hours

கலயாய பிரதேசத்தில் நிறுவப்பட்ட பொறியியல் சேவைப் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சேதனை பசளை உற்பத்தி

இராணுவத் தளபதியின் சிந்தனைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும் 'துரு மிதுரு – நவ ரடக்' திட்டத்திற்கு அமைவாக தென்னைச் செய்கை சபை மற்றும் மகாவலி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் கலயாயவில் நிறுவப்பட்ட பொறியியல் சேவைகள் பயிற்சிப் பாடசாலையில் 250க்கும் மேற்பட்ட மருதை, இழுப்பை மற்றும் தென்னை கன்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (30) நடப்பட்டன.

பொறியியல் சேவை பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் மில்ரோய் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் படையினர் இணைந்துக்கொண்டனர்.

மேலும், சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் தேசிய திட்டத்திற்கு ஆதரவாக பொறியியல் சேவைகள் பயிற்சிப் பாடசாலையில் 2000 கிலோ சேதன பசளை தின்ம மற்றும் திரவ தயாரிக்கும் திட்டமும் இதன்போது தொடங்கப்பட்டது.